ரூ.10,000 நிதி: காவலர் அசத்தல்

சென்னை : குழந்தையின் பிறந்தநாளையொட்டி, போலீஸ்காரர் ஒருவர், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு, 10 ஆயிரம் ரூபாய் நிதி அளித்தார்.


சென்னை, அம்பத்துார் எஸ்டேட் காவல் நிலையத்தில், தலைமை காவலராக பணியாற்றுபவர் அன்பழகன்.


இவரது மகன் தர்ஷித் அபினவ். இந்த குழந்தைக்கு, நேற்று முதலாம் ஆண்டு பிறந்த நாள்.


இதையொட்டி, அன்பழகன், மனைவி ரம்யா மற்றும் குழந்தையுடன், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு, போலீஸ் கமிஷனர், ஏ.கே.விஸ்வநாதனிடம் நேற்று முன்தினம், 10 ஆயிரம் ரூபாய் நிதி அளித்தார். அப்போது, குழந்தையை வாழ்த்திய கமிஷனர், அன்பழனுக்கும், அவரது மனைவிக்கும் பாராட்டு தெரிவித்தார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்