ஆதரவற்றவர்களுக்கு உதவிட அரிசி, பருப்பு தாருங்கள்: சென்னை மாநகராட்சி அழைப்பு

கொரோனாவுக்கு எதிராக போராட சென்னை மாநகராட்சிக்கு உதவ நினைப்பவர்கள் அரிசி, பருப்பு போன்ற நீண்ட நாட்கள் பயன்படுத்தும் பொருட்களை கொடுக்கலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.


கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் ஆதரவற்று இருப்பவர்களை அழைத்து சென்று சென்னை மாநகராட்சி சொந்தமான சமுதாய நலக்கூடம் தங்கவைக்கப்பட்டுள்ளனர் இவர்களுக்கு அத்தியாவசியமான தேவைகளை அளிப்பதற்காக முழுவதுமாக அளிப்பதற்காக சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு விதமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


அந்த வகையில் இவர்களுக்கு உதவ நினைக்கும் தனியார் தொண்டு நிறுவனங்கள் கார்ப்பரேட் நிறுவனங்கள் என யாராக இருந்தாலும் அவர்கள் சென்னை மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து நேரடியாக தங்களால் இயன்றதை செய்யலாம் என்றும் மேலும் கட்டுப்பாட்டு அறை எண் 1913 என்ற எண்ணிற்கோ அல்லது 044-25384520 என்ற எண்ணிற்கோ தொடர்புகொண்டு கொடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் பொருட்களாக கொடுக்க நினைப்பவர்கள் அரிசி,பருப்பு, எண்ணெய், பால் பவுடர் சாம்பார், ரசப் பொடி,நாப்கின், கோதுமை மாவு, சோப்பு போன்றவற்றை கொடுக்காலம் என தெரிவிக்கப்பட்டுள்ளது


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்