தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்: தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை...

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு மூன்று மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டுமென்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.


கடந்த ஆண்டு ஜுன் 23ஆம் தேதி நடந்த நடிகர் சங்கத் தேர்தலை ரத்து செய்தும், மீண்டும் தேர்தல் நடத்துமாறும், தனி அதிகாரி பணியை தொடரலாம் எனவும் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஷால் மேல்முறையீடு செய்திருந்தார்.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு நடத்திய விசாரணையில், புதிதாக தேர்தல் அறிவிப்பாணை வெளியிட வேண்டும் எனவும் உறுப்பினர்களை சேர்த்து வாக்காளர் பட்டியல் தயாரிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.


புதிதாக நடத்தப்படும் தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் நடைமுறைகளை பின்பற்றி மூன்று மாதங்களில் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கும் இடைக்கால தடை விதித்தனர்.


அதேவேளையில், நடிகர் சங்கத்தை தனி அதிகாரி தொடர்ந்து நிர்வகிக்கலாம் எனவும் நீதிபதிகள் அனுமதித்த நிலையில் விஷால் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தொடர்பாக ஏப்ரல் எட்டாம் தேதி தமிழக அரசு பதிலளிக்கவேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்