புரோக்கர்கள் பிடியில் தனி வட்டாட்சியர் கிருபா உஷா!

திருவள்ளூர் மாவட்டத்திற்குட் து ஆவடி மாநகராட்சி. பெரு நகராட்சியாக இருந்த இந்த ஆவடி மாநகராட்சியாக சில மாதங்களுக்கு முன்பு தான் தரமுயர்த்தப்பட்டது. ஆவடியை இரண்டாவது சென்னை என்று சொன் னால் அது மிகையாகாது.


45 வார்டுகளை உள்ளடக்கிய இந்த ஆவடி மாநகராட்சி உட்பட்டு 11 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியில் உள்ளனர். இந்த பதினோரு வார்டுகளிலும் பல கிராமங்களில் டவுன் சர்வே செய்து செட்டில்மெண்ட் பட்டா வழங்கப்பட்டு வருகிறது. இத்தகைய பட்டா வழங்கும் சிறப்பு தாசில்தார் பணியில் இருப்பவர்தான் கிருபா உஷா.


இந்த கிருபா உஷா ஏற்கனவே பூந்தமல்லி மற்றும் அம்பத்தூரில் வருவாய் ஆய்வாளராக இருந்து பதவி உயர்வில் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக் கோட்டை வட்டாட்சியராக பணியாற்றி தற்போது ஆவடி தனி வட்டாட்சியராக பணியில் உள்ளார். ஏற்கனவே பூந்தமல்லி, அம்பத்தூர், ஊத்துக்கோட்டை பகுதிகளில் மணல் கொள்ளை போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு கோடிக்கணக்கான சொத்துகளை வாரி சுருட்டியவர்தான் இந்த கிருபா உஷா. தற்போது ஆவடியில் பட்டா வழங்கும் தனி வட்டாட்சியராக பணியில் உள்ளார். வருவாய் ஆய்வாளராக இருந்தபோதே அப்படி சுருட்டியவர் தனி வட்டாட்சியராக சும்மா இருப்பாரா?


ஆவடி தனி வட்டாட்சியர் அலுவலக மானது ஆவடி அம்மா உணவகத்தின் மேல் மாடியில் செயல்பட்டு வருகிறது. இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் அன்றாடும் வேலை நாட்களில் அந்த அலுவலகத்தில் பொது மக்களை விட இடைத்தரகர்களே அதிக அளவில் காணப் படுகின்றன.


தனி வட்டாட்சியர் கிருபா உஷாவை சுற்றி பாதுகாப்பு படையினர் போல் இந்த புரோக்கர்கள் செயல்பட்டு வருகின்றனர். ஆவடி சுற்றுவட்டார பகுதி களான மிட்டனமல்லி, முத்துப்பேட்டை, கோவில்பதாகை, திருமுல்லைவாயில், பருத்திப்பட்டு, விலிஞ்சியம்பக்கம், தண்டரை, சேக்காடு ஆகிய பகுதிகளில் டவுன் சர்வே செய்யப்பட்டு செட்டில் மெண்ட் பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகிறது.


இந்த பகுதியில் உள்ள மக்கள் தங்களுக்கு பட்டா வேண்டும் என்று தனிவட்டாட்சியர் உஷாவை அணுகினால் இதில் சொத்தை அதில் சொத்தை என்று ஏதோ ஒரு காரணம் காட்டி அவர்களை பட்டா தராமல் அலைக் கழித்த திருப்பி அனுப்புவதி லேயே குறியாக இருப் பார். மாறாக இவரது கட்டுப்பாட்டிலுள்ள இடைத்தரகர்களை அணுகினால் ஓரிரு வாரங் களில் பட்டா கைக்கு வந்து சேரும் என்பது தான் ஆவடி தனி வட் டாட்சியர் அலுவலகத் தின் நிலை.


ஆவடி தனி வட் டாட்சியர் அலுவலகத்தை பொறுத்தவரை வேலை நடக்க வேண்டும் என்றால் புரோக்கரை அணு கினால் மட்டுமே தான் விமோசனம் என்ற நிலை நிலவி வருகிறது. ஏற்கனவே தனி வட்டாட்சியராக பணியாற்றிய வில்சன் மற்றும் ஸ்ரீதர் பல போலி பட்டாக்களை வாரி இறைத்து விட்டு சென்று விட்டனர். அது சம்பந்தமான புகார் லஞ்ச ஒழிப்பு துறை வரை செல்ல லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வு செய்ததில் இதற்கு முன்னிருந்த தனி வட்டாட்சியர் ஸ்ரீதர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதன் பிறகு பொறுப் பேற்றுள்ள தற்போதுள்ள தனி வட்டாட்சியர் கிருப உஷா அவரை மிஞ்சும் அளவுக்கு லஞ்ச லாவண் ய வருகிறார்.


வட்டார துணை ஆய்வாளராக இருந்து ஓய்வு பெற்ற ரவி தலைமை யில் ஆவடி பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து இடைத்தரகர்கள் செந்தில், முருகேசன், நாராயணன், சியாம் ஆகியோருடன் துணை யுடன் தனி வட்டாட்சியர் குறிப்பாக உஷாவின் ஆசி யுடன் அரசு ஆவணங் களை அலுவலகத்திற்கு வெளியே எடுத்துச் சென்று பட்டா தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர்.


ப சுந் தோல் போர்த்திய புலி என்பார் கள் அதுபோல் அரசு அலுவலர் போர்வையை போர்த்திய ஒரு புரோக்கர்தான் வருவாய் ஆய்வாளர் விஷ்ணு பிரியா. தனி வட்டாட்சி யர் கிருபா இருந்து புரோக்கர்களை தனது கட்டுப் பாட்டில் வைத்து செயல்படுவதில் விஷ்ணு பிரியா வல்லவர். அரசு ஆவணங்கள் நகல்களாகவும் சாஃப்ட் கா களாக பெண் வெளியே எடுத்துச் செல்லப்பட்டு மேலே குறிப்பிடப் பட்டுள்ள புரோக்கர்களால் பட்டா தயார் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு லஞ்சத்தை வாங்கிக்கொண்டு வினியோகம் செய்யப்படுகிறது.


லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனை நடத்தி னாலும் தனி வட்டாட்சி யர் கிருபாவை எதுவும் செய்ய முடியாது ஏனென் றால் லஞ்சப் பணத்தை அவர் நேரடியாக வாங்குவதில்லை. மாறாக மேலே குறிப்பிடப்பட் டுள்ள புரோக்கர்கள் மூல மாக ஒரு கையெழுத்துக்கு இவ்வளவு என்று குறிப் பிட்டு வாங்கிக் கொள் கிறார். இதை எதையுமே அலு வலகத்தில் வைத்து அவர் வாங்குவதில்லை மாறாக அவர்கள் வாடகை எடுத்திருக்கும் வீட்டிலேயோ அல்லது வெளி யிடங்களில் வைத்து பங்கு பிரித்துக் கொள்கின்றனர்.


ஆக்கிரமிப்பு நிலங்கள், புறம்போக்கு நிலங்கள், நீர்நிலை சொந்தமான இடங்கள், பஞ்சமி நிலங்கள் ஆகிய நிலங்களுக்கான பட்டாக்களை பல லட்சங்கள் லஞ்சமாக வாங்கிக் கொண்டு இந்த புரோக்கர்கள் மூலமாக சிறப்பாக வாரி வழங்கி வருகிறார்.


வெளிப்படையாக இப்படி நடக்கும் கூட்டுக்கொள்ளை இது வரை திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி மகேஸ்வரி ரவிக்குமா காதுகளுக்கு எட்டாமல் இருந்திருக்குமா? இன்று வரை தனி வட்டாட்சியர் கிருபா உஷா மீது நடவடிக்கை இல்லாததற்கு காரணம் மாவட்ட ஆட்சிய செல்வதால்தான் என்று பொதுமக்கள் அதிகாரிகளின் காதுபடவே பேசி வருகிறார்கள்.


இதனை எல்லாம் தெரிந் திருந்தும் கண்டும் காணாமல் அதிகாரிகள் தங்கள் வேலையை தொடர்ந்து செய்து கொண்டேதான் இருக்கிறார்கள் அவர்கள் இதைப் பற்றி கவலைப்படுவதாகவே தெரியவில்லை .


மாவட்ட ஆட்சியருக்கு இதன் பங்கு .. போகிறதா? இல்லையா? என்பது ஆண்ட வனுக்கே வெளிச்சம். மகேஸ்வரி ரவிக் குமாருக்கு இதில் தொடர்பு இல்லை என்றால் தனி வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவதற்கான காரணம் என்ன? தனி வட்டாட்சியர் மீது நடவடிக்கை பாயுமா ? இடைத் தரகர்கள் விரட்டியடிக்க படுவார்களா? ஆவடி பொதுமக்களுக்கு விமோசனம் கிடைக்குமா ?


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்