குற்றபத்திரிக்கை என்றால் என்ன....

ஒரு சட்டத்தை அமலாக்கம் செய்யும்பிரிவு, (உ.ம் = காவல்துறை ) குற்றம் செய்தவர்களை பற்றி தயாரிக்கும் ஒரு ஆவணம். இது நீதிமன்றத்தில் சமர்பிக்கபடுகிறது.


நீதிமன்றத்தில் இது சமர்பிக்கபட்டவுடன், யார் குற்றம் இழைத்தார்கள் என்று நீதிமன்றம் கருதுகிறதோ, அவர்கள் மேல், வழக்கை தொடர்ந்து நடத்த, உத்தரவிடும்.



முதல் தகவல் அறிக்கையின் தொடர்ச்சியே, குற்ற பத்திரிக்கை. குற்ற பத்திரிக்கையில், முதல் தகவல் அறிக்கையில் உள்ள நபர்களை சேர்க்காமலும் விடலாம்.


சேர்க்காமல் விட, போலீஸ் காரணம் சொல்ல வேண்டும். புகார் மனுதாருக்கு*, *காவல் துறை சரியாக விசாரிக்காமல், விட்டு விட்டதாக எண்ணம் இருந்தால், மீண்டும் விசாரிக்க சொல்லி, அதே வழக்கில், அதே நீதிமன்றத்தில் மனு செய்யலாம்.


அல்லது உயர்நீதிமன்றத்தில் மனு செய்யலாம். குற்ற பத்திரிக்கை, புகார் மனுதார், மற்றும் நடந்த சம்பவத்தை விவரிக்கும் சாட்சிகள் ஆகியோரின் வாக்கு மூலங்கள்* *இருக்கும். விசாரணை அதிகாரி, முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்த அதிகாரி அனைவரது வாக்கு* *மூலம் இருக்கும்.


புகார் மனு, முதல் தகவல் அறிக்கை, குற்ற பத்திரிக்கை* *ஆகியவற்றில் உள்ள முரண்களை வைத்தே, குற்றவாளிகள்* *விடுதலை ஆகிறார்கள்.*
*முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ததில்*


இருந்து, அறுபது நாட்கள் முதல் தொண்ணூறு நாட்களுக்குள், குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அப்படி செய்ய தவறினால், பிணை கிடைக்காத குற்றவாளிக்கு பிணை கிடைக்க கூடும். உரிய காலத்தில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யாவிட்டால், புகார் மனுதார், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திலோ, உயர் நீதிமன்றத்திலோ, வழக்கு தொடுத்து, குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்ய சொல்லலாம்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்