கொரோனாவுக்கு முதல் பலி

கொரோனா வைரஸ் தொற்றால் இஸ்ரேலில் முதல் பலி நிகழ்ந்துள்ளது.


அந்நாட்டில், தற்போது வரை 945 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சுமார் 10 பேர் ஆபத்தான நிலையிலும், இவர்களில் 15 பேர் பூரண குணமடைந்து திரும்பியதாகவும் கூறப்படுகிறது.


இந்நிலையில், கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்ததாக கூறப்பட்ட 88வயதான ஆர்யே ஈவன் (Aryeh Even) என்ற முதியவர் ஜெருசலம் மருத்துவமனையில் கடந்த 20ம் தேதி உயிரிழந்தார். இவரின் உடல் உறவினர்கள் இல்லாமல், தனியார் அமைப்பினரால் அடக்கம் செய்யப்பட்டது.


பொதுவாக உயிரிழந்தவர்களின் உடல்கள் துணியால் மூடி அடக்கம் செய்யப்படுவது வழக்கம். கொரோனா அச்சம் காரணமாக முதியவரின் சடலத்தை தடிமனான பிளாஸ்டிக் கவரால் மூடிய, தனியார் அமைப்பினர் முகக்கசவம், பாதுகாப்பு உடைகள் சகிதமாக உடலை அடக்கம் செய்தனர்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்