ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் அறிக்கை !

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது.


உலக நாடு முழுவதும் பரவி வரும்  கொரணா வைரஸ் என்கிற கொடிய நோய்லிருந்து இந்திய மக்களை பாதுகாக்க மத்திய அரசு அணைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்களை எடுத்து கொரணா வைரஸ் மக்களுக்கு பரவாமல் கட்டு படுத்தும் வகையில் நடவடிக்கை எடுத்து வருவதை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம்  வரவேற்கிறது . 


தமிழ்நாட்டில் இந்த கொரணா வைரஸ் பரவாமல் தடுக்க போர்க்கால அடிப்படையில்  முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து மக்கள் நலனில் முழு அக்கறை செலுத்தி வரும் மாண்புமிகு முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி.


மற்றும் சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களுக்கும் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறோம்.


கொரணா வைரஸ் தடுப்பு  காரணமாக வாடகை கார்,வேன்,தொழில் முற்றிலும் முடங்கியுள்ளது .இதில் வாகன உரிமையாளர்கள் மாதம் தொறு வாகனத்திற்கு கட்டும் பைனான்ஸ் கட்ட முடியாமல் பாதிக்க படும் சூழல் உள்ளது .  


ஆகவே  பைனான்ஸ் நிறுவனங்கள் மூன்று மாத கால அவகாசம் வழங்கி அவர்களின் வாழ்வாதாத்தை பாதுகாக்கபடும் வகையில் தமிழக அரசு சிறப்பு கவணம் செலுத்தி உரிய நடவடிக்கையை உடனடியாக மேற் கொள்ள வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது.



எனவே  :  கொரணா வைரஸ் தடுப்பு காரணமாக தினசரி கூலி வேலை செய்யும் தொழிலாளர்களுக்கும் மற்றும் நடுத்தர மக்களுக்கும்  பொருளாதாரம் பாதிப்பை ஏற்படுத்தும் வண்ணமாக உள்ளது.  


ஆகவே  ஏழைகளின் குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்க தமிழக அரசு உடனடியாக  நடவடிக்கை எடுக்க வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்