39 பேர் கொரோனா மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர் - சுகாதாரத்துறை

தமிழ்நாட்டில் 39 பேர் கொரோனா மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர் - சுகாதாரத்துறை


தமிழகத்தில் கொரோனா வைரஸ் அறிகுறியால் 39 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


விமான நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ சோதனையின் அடிப்படையில் இதுவரை , மூவாயிரத்து 481 பேர் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


320 பேரின் மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதில், 232 பேருக்கு நோய் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


84 பேரின் ஆய்வு முடிவுகள் இன்னும் கிடைக்க வில்லை என்றும், புதியதாக 2 மாதிரிகள் ஆய்வகத்திற்கு எடுத்து செல்லப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்ட டெல்லியில் இருந்து வந்தவரின் உடல் நிலை சீராக இருப்பதாகவும்  அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்