டோல்கேட் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர்

சேர்ந்தே இருப்பது கப்பலூர் டோல்கேட்டும் சர்ச்சையும் என சொல்கிற அளவிற்கு பல சர்ச்சைகளை சந்தித்த சுங்க சாவடிதான் மதுரை விருதுநகர் சாலையில் உள்ள கப்பலூர் சுங்கச்சாவடி.பாஸ்டேக் விவகாரத்தில் அய்யப்ப பக்தர்களை தாக்கிய விவகாரம் ,வடமாநில ஆட்களை வைத்து மிரட்டி கட்டணம் வசூலிக்கத் தொடங்கியது என பலர் புகார்கள் இந்த கப்பலூர் டோல்கேட் நிர்வாகத்தின் மீது உண்டு .இந்த டோல்கேட் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தொகுதிக்குள் வருகிறது .தொடர்ந்து அமைச்சரின் கவனத்திற்கு இந்த புகார் செல்ல அவர் ஊழியர்களுக்கு அன்பான எச்சரிக்கை விடுத்துள்ளார் .


கப்பலூர் தொழிற்பேட்டை அரங்கத்தில் கப்பலூர் சுங்கச்சாவடியில் ஊழியர்கள் வாகன ஓட்டுனர்களுக்குமிடையே ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமில் பேசிய அவர் கப்பலூர் சுங்கச்சாவடி ஊழியர்கள் வரும் வாகன ஓட்டிகளிடம் நல்ல மதிப்பை பெரும் விதமாக மென்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.உரிய விதிமுறைகளை பின்பற்றி, வாகன ஓட்டிகளிடம் மென்மையாக பழகினாலே பொதுமக்களால் எந்த சிக்கலும் ஏற்படாது என்று பேசினார். 


திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடியில் அடிக்கடி ஏற்படும் பிரச்சினைகளால் எனக்கு கஷ்டங்களை வரக்கூடிய வாக்கு பாதிக்கப்படுகிறது; 


இந்த பிரச்சனைக்கெல்லாம் வருவாய் துறை ஊழியர்களும் அமைச்சர் தான் காரணம் என சிலர் பிரச்சி னையை கொளுத்திப் போட்டு விட்டு போகிறார்கள் முறையான விதிமுறைகளை பின்பற்றி வாகன ஓட்டிகளிடம் அன்புடனும், பணிவுடனும், பாசத்துடனும் பேச வேண்டும்;


அது எப்படி என்றால் ஒரு குழந்தைக்கு தாய் ஊட்டும் உணவு போல் இருக்க வேண்டும் சித்தி உணவு ஊட்டுவது போல் இருக்கக்கூடாது


வாகன ஓட்டிகளை மாற்றான் தாய்மனப்பான்மையோடு பார்க்கக்கூடாது; அனைவரையும் சகோதரர்களாக பார்க்க வேண்டும் என பேசிக் கொண்டிருந்த அமைச்சர், திடீரென எங்கள் பாடு போல் உலகத்தில் யாருக்குமே கிடையாது ஓட்டு கேட்டு செல்லும்போது பாதிப்பேர் சிரிக்காமல் கோபத்துடன் பதில் சொல்வார்கள் கோபப்பட்டால் ஓட்டு போய்விடும் என்பதால் பொறுத்துக் கொண்டு அவர்கள் சொல்வதைக் கேட்டு பொறுமையோடு இருப்போம்.


சும்மா ஓட்டு வாங்கி விட முடியாது நிதானம் பொறுமையோடு சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும் இல்லையென்றால் ஓட்டு போய்விடும்.ஒரு ஓட்டு போட வைக்க நாங்கள் என்ன பாடுபடுகிறோம் தெரியுமா? சும்மா ஒன்றும் அமைச்சராக வந்து விட முடியாது.


எவ்வளவு கோபப்பட்டாலும் திட்டினாலும் மானம், வெட்கம், ரோசம் எல்லாவற்றையும் மனதுக்குள் அடக்கி கொண்டு ஓஏபி வாங்கவும், பட்டா வாங்கவும் என்னிடம் வருவீர்களே அப்பொழுது பார்த்துக்கொள்கிறேன் என சிரித்துக்கொண்டே ஓட்டு கேட்போம்.


அதில் சில நல்ல உள்ளங்களும் எங்களை வரவேற்று ஆதரிப்பார்கள். அந்த வரவேற்பில் நாங்கள் பட்ட கஷ்டங்களை எல்லாம் மறந்து மகிழ்ச்சியோடு செல்வோம்.


அதேபோன்று டோல்கேட் ஊழியர்களும் வருகின்ற வாகன ஓட்டிகள் எவ்வளவு திட்டினாலும் கோபப்பட்டாலும் பொறுமையோடு அணுகினால் எந்தப் பிரச்சினையும் வராது என தம் ஆதங்கத்தையும் கொட்டி தீர்த்தார்


அமைச்சரின் அன்பு எச்சரிக்கை பணிவார்களா பார்க்கலாம்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்