பலரிடம் பண மோசடியில் ஈடுபட்ட பெண் ஐடி ஊழியர் மீது புகார்

ஏற்றுமதி தொழில் செய்வதாக கூறி பல ஐடி ஊழியர்களை மோசடி செய்த பெண் ஐடி ஊழியர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


சென்னையை அடுத்த பெருங்களத்தூரை சேர்ந்த சுந்தர் என்பவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.


இந்நிலையில், இவரது சகோதரி உடன் வேலை பார்க்கும் பெண் எனக் கூறி சுமித்ரா என்பவர் அறிமுகமாகியுள்ளார்.


தனது கணவர் சிங்கப்பூரில் தொழிலதிபராக இருப்பதாகவும், அவரது தொழிலில் முதலீடு செய்தால், முதலீட்டுத் தொகையில் 20 சதவீத பங்கு லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.


இதனை நம்பி 8 லட்சம் ரூபாய் வரை கொடுத்துள்ளார். இதனையடுத்து சுமித்ராவை தொடர்பு கொள்ள முடியாததால், ஏமாற்றப்பட்டதை அறிந்த சுந்தர், ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.


இதேபோல், சுமித்ரா பலரையும் ஏமாற்றி 50 லட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பலரும் சுமித்ரா மீது புகார் கொடுத்த வண்ணம் உள்ளனர்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்