இனி பட்டா மாறுதல் செய்ய தாலுகா அலுவலகம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை

சென்னை: பத்திர பதிவு செய்தவுடன் தானாக பட்டா மாறுதல் செய்யும் புதிய நடைமுறையை கொண்டு வந்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், இனி பட்டா மாறுதல் செய்ய தாலுகா அலுவலகம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலை ஏற்பட்டு இருப்பது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தில் சார்பதிவாளர் அலுவலகங்கள் மூலம் வீடு, விளைநிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பத்திரப்பதிவு செய்யப்படுகிறது.


இந்த பதிவு முடிந்தவுடன் பட்டா பெயர் மாற்றுவதற்கு படிவத்தை வருவாய்த்துறைக்கு அனுப்ப வேண்டும். இதற்கான ஒப்புகை சீட்டு எண் பொதுமக்களிடம் அளிக்கப்படுகிறது. அதை வைத்து பொதுமக்கள் பட்டா பெயர் மாறுதல் பெற தாலுகா அலுவலகத்தை அணுகினால் கூட உடனடியாக கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது. அவர்கள், சர்வே எண் சரி பார்க்க வேண்டும், மூல ஆவணம் பார்க்க வேண்டும் எனக்கூறி அலைக்கழிக்கின்றனர்.


குறிப்பாக, ஒரே சர்வே எண்ணில் பல உட்பிரிவு இனங்கள் இருக்கும் பட்சத்தில் நேரில் சென்று ஆய்வு செய்யலாம். அதே நேரத்தில் ஒரே சர்வே எண்களில் சொத்துக்கள் இருந்தால் உட்பிரிவு செய்ய வேண்டியதில்லை. ஆனால், பல்வேறு காரணங்களை கூறி பட்டா மாறுதல் செய்து தராமல் தாலுகா அலுவலகத்தில் இழுத்தடித்து வருவதாக புகார் எழுந்தது. இந்த நிலையில், இத்திட்டத்தில் புதிய மாறுதலை கொண்டு வந்து வருவாய்த்துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா உத்தரவிட்டுள்ளார்.


அதன்படி, இனி வருங்காலங்களில் சார்பதிவாளர் அலுவலகங்களில் இருந்து ஒரே சர்வே எண்களில் சொத்துக்கள் இருந்தால், பத்திரம் பதிவு செய்தவுடன் தானாக பட்டா மாறுதல் செய்யப்பட்டு விடுகிறது. இந்த திட்டத்தின் படி, சார்பதிவாளர்கள் சொத்தை பதிவு செய்தவர்கள் அந்த சொத்தில் முழு உரிமை உள்ளவரா, அந்த சொத்துக்களில் வில்லங்கங்கள் இருக்கிறதா, முழு அதிகாரம் அந்த சொத்தில் அவருக்கு உள்ளதா, அவர் மீது வேறு சொத்து உள்ளதா, அதற்கான பட்டா இருக்கிறதா என்பது தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும்.


அதன்பிறகு சொத்துக்களை பதிவு செய்வதன் மூலம் தானாக பட்டா மாறுதல் ஆகி விடும் என்று பதிவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ஒரு பட்டா, ஒரு சொத்துக்கு யாருடைய ஒப்புதலும் தேவையில்லை.


இதற்கு நாங்கள் பதிவு செய்தவுடன் தானாக பட்டா மாறுதல் ஆகி விடும். இதன் மூலம் பொதுமக்கள் அலைய வேண்டிய அவசியம் இருக்காது. இதன் மூலம் சார்பதிவாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். ஆனாலும், இதனால், பொதுமக்கள் பயனடைவார்கள்' என்றார். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 'தமிழக அரசின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இதன் மூலம் மக்களின் அலைச்சல் குறையும்' என்றனர்.


பட்டா நகல் ரயத்துக்களுக்கு கணினி மூலம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, பட்டா மாறுதல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகி விட்டது. இப்பணி செம்மையாக நடைபெறுவதை, கிராமத்தில் முகாமிட்டு சோதனை செய்வதன் மூலமும், ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி ஆய்வு செய்வதன் மூலமும் உறுதி செய்யப்பட வேண்டும்.


ஆய்வின் போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை: கிராமக் கணக்கு எண்:


3 ஒவ்வொரு வருடமும் கிராம நிர்வாக அலுவலரால் எழுதப்படும் பதிவேடாகும். இப்பதிவேடு நான்கு பிரிவுகளாக எழுதப்பட வேண்டும். பிரிவு - உரிமையை விட்டு விடுதல் பிரிவு - ஒப்படை பிரிவு - பட்டாமாறுதல்.


4 - பிரிவு - இதர மாறுதல்கள் (நில எடுப்பு நில வகைபாடு மாறுதல்கள்)


ஒவ்வொரு பிரிவுக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ள படிவத்தின் தலைப்பினை மாற்றாமல் எழுதப்பட்டிருக்க வேண்டியது அவசியம். 3 - பிரிவு - பட்டா மாறுதல்: இப்பிரிவு கீழ்கண்ட உட்பிரிவுகளை கொண்டிருக்க வேண்டும். 1. வருவாய் பாக்கிக்காக விற்பனை செய்யப்பட்டது. அ) அரசால் வாங்கப்பட்டது ஆ) தனிநபர்களால் வாங்கப்பட்டது


2. நீதிமன்ற ஆணையின் பேரில் விற்பனை அல்லது மாற்றம் செய்யப்பட்டது.


3. தனியார் விற்பனை அல்லது கொடை ஆகியவற்றின் பேரில் மாற்றப்பட்டது.


4. வாரிசு முறையினால் மாற்றப்பட்டது.


5. 12 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தொடர்ந்தாற்போல் அனுபோகம் செய்ததினாலும் அது போன்ற காலத்திற்கு பதிவு பெற்ற பட்டாதாரர் காணப்படாது போனாலும் மாற்றப்பட்டவை.


பட்டா மாறுதல் கோரி தனி விண்ணப்பங்கள் கிடைக்கபெறுதல் பேரிலும், சார் பதிவாளர் அலுவலகங்களில் ஆவணங்கள் பதிவு செய்யப்படும் போது சார்பதிவாளர்கள் பெறும் விண்ணப்பங்கள் பேரிலும் பட்டா மாறுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.


வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் விண்ணப்பங்கள் பெறலாம் பதிவு செய்யப்பட்ட பட்டாதாரர் இறந்து விடும் நேர்வுகளில் கிராம நிர்வாக அலுவலர்கள், வாரிசு விபரங்களுடன் அறிக்கை அனுப்பலாம். மேலும் கிராம நிர்வாக அலுவலர் தங்களது கவனத்திற்கு வரப்பெற்றுள்ள நில உரிமையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் வட்டாட்சியருக்கு தெரிவிக்கலாம்.


6. வாரிசு அற்று அரசினரை சேர்ந்த நிலங்கள்.


இவ்விண்ணப்பங்கள் படிவம் XXXV-I (வருவாய் நிலை ஆணை 1) -ல் ஆவணங்கள் பதிவு செய்யப்படும் போது, சார் பதிவாளரால் பெறப்பட்டு வட்ட அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. பகுதி நிலம் விற்பனை செய்யும் போது, உட்பிரிவு கட்டணம் வசூல் செய்து, விபரமும் சார் பதிவாளரால் தெரிவிக்கப்படுகிறது.


மேற்குறிப்பிட்ட இரு முறைகளிலும் பெறப்படும் பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் வட்ட அலுவலகத்தில் தனித்தனியாக இரு பதிவேடுகளில் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.


முழு புலங்க ள் (Full Fields): முழு புலங்கள் பொறுத்து பட்டா மாறுதல் கோரும் நேர்வுகளில் கிராம நிர்வாக அலுவலர்கள், கணக்கு எண் : 3-ல் பதிவு செய்து, நிர்ணயிக்கப்பட்ட வினாப்படிவத்தினை பூர்த்தி செய்து அறிக்கை அனுப்பி வைக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் வினாப்படிவம் பூர்த்தி செய்யும் போது, குறிப்பிட்ட நேர்வில், தாழ்த்தப்பட்டோருக்கு ஒப்படை செய்யப்பட்ட நிலம் உட்படுகிறதா, நிபந்தனை மீறப்பட்ட இனமா, நீதிமன்ற நடவடிக்கை ஏதும் நிலுவையில் உள்ளதா என்பதனை தெரிவிக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் அனுப்பியுள்ள அறிக்கையினை பரிசீலித்து மண்டல துணை வட்டாட்சியர் ஆணை பிறப்பிக்க வேண்டும்.


பகுதி நிலங்க ள் (Part Fields) (Sub Division Cases) உட்பிரிவு செய்து பட்டா மாறுதல் ஆணை பிறப்பிக்க வேண்டிய இனங்களில், உட்பிரிவு கட்டணம் செலுத்தப்பட்ட செலான் மற்றும் விண்ணப்பத்தினை அளவருக்கு அனுப்பி வைத்து உட்பிரிவு ஆவணங்கள் தயாரிக்கப்பெற்று, வட்டாட்சியரால் உட்பிரிவு அங்கீகரித்தும், பட்டா மாறுதல் செய்தும், ஆணை பிறப்பிக்கப்படும்.


மேற்கண்ட இரு நேர்வுகளில் மட்டுமே, வழக்கமாக விண்ணப்பங்கள் அதிகமாக பெறப்படுகின்றன. இவற்றின் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கையினை, கிராமத்தில் முகாம் செய்யும் போது ஆய்வு செய்யப்பட வேண்டும். இணைப்பு ஆவணங்கள் (Ginமுனுழஉரஅநவௌ) இல்லையென மனுக்கள் நிராகரிக்கக கூடாது. மனுதாரருக்கு அதனை தாக்கல் செய்ய உரிய வாய்ப்பளித்து, பின்னரே விரிவான ஆணை பிறப்பிக்கப்பட வேண்டும்.


பட்டா மாறுதல் ஆணை நகலொன்று கிராம நிர்வாக அலுவலருக்கு சம்பந்தப்பட்ட கணக்குகளில் மாற்றம் செய்ய அனுப்பி வைக்கப்படுகிறது. அதன்படி, கணக்கு எண்: 3-ல் பதிவுகள் மேற்கொண்டும், சிட்டா மற்றும் அடங்கலில் உரிய மாற்றங்கள் செய்தும் அறிக்கை அனுப்பிவைக்கப்பட வேண்டும். மேற்குறிப்பிட்ட மாற்றங்கள் குறித்து பதிவுகளை வருவாய் ஆய்வாளர் பராமரிப்பு நில அளவரால் சரி பார்த்து மேலொப்பம் செய்யப்பட வேண்டும். வட்ட அலுவலகத்தில் பராமரிக்கப்படும் சிட்டாவின் மற்றொரு பிரதியிலும் உரிய மாற்றங்கள் செய்த பின்னரே கோப்பு முடிவு செய்யப்பட வேண்டும்.


பட்டா மாறுதல் விண்ணப்பங்களை முடிவு செய்ய நிர்ணயிக்கப்பட்டுள்ள காலக்கெடு:


புல உட்பிரிவு செய்து பட்டா மாறுதல் செய்யக் கோரும் விண்ணப்பங்களுக்கு 30 நாட்களும், மற்ற விண்ணப்பங்களுக்கு 15 நாட்களும் ஆகும்.


1.உட்பிரிவு கட்டணம் நகரப் பகுதிகள் ரூ.50/கிராமப் பகுதிகள் ரூ.40/2.எல்லை மனு கட்டணம் ரூ.80/


 


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!