தொன்மை பாதுகாப்பு மன்ற துவக்க விழா
புனித மேரிஸ் தோப்பு நடுநிலைப்பள்ளியில் தொன்மை பாதுகாப்பு மன்றம் துவக்க விழா நடைபெற்றது. பள்ளி தாளாளர் அருட்தந்தை மரியவளன் தலைமை தாங்கினார்.
திருச்சி புனித வளனார் கல்லூரி முன்னாள் வரலாற்றுப் பேராசிரியர் அருமைராஜ், திருச்சிராப்பள்ளி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவகுமார் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினார்கள்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முன்னாள் முதல்வர் சிவக்குமார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருந்தார்.
திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள், சேகரிப்போர் சங்க தலைவர் விஜயகுமார், முகமது சுபேர் ,துறையூர் பெரியசாமி உள்ளிட்டவர்கள் நாணயங்கள் ,பணத்தாள்கள் தொல்லியல் சார்ந்த பொருட்களை காட்சிப்படுத்தி அதன் வரலாறு, கலாச்சாரம், பண்பாட்டை எடுத்துரைத்தார்கள்.
முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் மெர்லின் வரவேற்க, வரலாற்று ஆசிரியர் காஞ்சனா நன்றி கூறினார்