கூந்தல் எப்படி பராமரிக்கலாம்...

கூந்தல் பிரச்சனை இன்று அனைத்து வயதினருக்கும் தலையாய பிரச்சனையாக இருக்கிறது. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பதற்கேற்ப கூந்தல் வைத்தியம் ஒன்றையும் விடாமல் செய்துபார்க்கிறார்கள் அனைத்து வயதினரும். குறிப்பாக டீன் ஏஜ் வயதினரிடம் இளநரை தாக்கம் அதிகமாகவே இருக்கிறது.


கூந்தல் வளர்வதில் பிரச்சனை, கூந்தல் அடர்த்தியில் பிரச்சனை, கூந்தல் உதிர்வதில் பிரச்சனை, கூந்தல் பொலி வில் பிரச்சனை, கூந்தல் அழகில் பிரச்சனை, கூந்தல் வறண்டு போவதில் பிரச்சனை, கூந்தல் அழுக்கடைந்து பொடுகுகள் அதிகமாவது பிரச்சனை, இளநரை இப்படி பிரச்சனைக்கு மேல் பிரச்சனை என்று கூந்தல் பரா மரிப்பில் இத்தனையும் கடந்துதான் ஆரோக்கியமான கூந்தலைப் பெற முடியும்.


வயது பாலினம் பேதமில்லாமல் ஆண் குழந்தைகளும் இளநரை பிரச்சனைக்கு ஆளாகிறார்கள். இந்த இளநரை யைக் கண்டு பயப்படவேண்டியதில்லை. தொடக்கத்திலேயே இதைக் கவனித்து உரிய பராமரிப்பு மேற் கொண்டால் இளநரையின் தாக்கத்திலிருந்து தப்பிக்கலாம்.


இள நரைக்கான தீர்வு இதுமட்டும்தான் என்று இதுவரையில் கண்டறியப்படவில்லை. ஆனால் அப்படி அவை வரும் பட்சத்தில் அதைத் தடுக்க பல வழிமுறைகளை நம் முன்னோர்கள் கையாண்டிருக்கிறார்கள்.


உடம்பில் வாதம், பித்தம், கபம் மூன்றும் சரியான அளவில் இருக்கும் பட்சத்தில் உடலில் எவ்விதமான நோய் களும் அண்டாது என்பது சித்தர்களின் வாக்கு. இம்மூன்றில் ஒன்றான பித்தம் அதிகரிக்கும் போது தலைமுடி நரைக்க தோன்றும். இதனோடு மரபு வழியிலும், உணவு பழக்கமும், உரிய பராமரிப்பின்மையும் கூட இள நரைக்கு காரணங்கள் என்று சொல்லலாம்.


கூந்தல் எப்படி பராமரிக்கலாம்?


கூந்தலை முதலில் சிக்கில்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். அவசர அவசரமாக தலை சீவாமல் கூந்தலை சிக்கில்லாமல் வைத்திருப்பது முக்கியம்.


வாரத்துக்கு இரண்டு நாள்கள் தலைக்கு குளிப்பதைக் கட்டாயமாக்கி கொண்டால் கூந்தலில் அழுக்கு படியாது. கூந்தலின் வறட்சியைத் தடுத்துவிடும் என்பதால் தலை முடி வளர்ச்சியும் உதிர்தலும் கட்டுப்படும். வறண்ட கூந் தல் பொலிவிழக்கும்.


வாரம் ஒருமுறை இல்லையென்றாலும் மாதம் இருமுறையாவது தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும்.


இராசயனம் கலந்த ஷாம்பு, சோப்பு (சிலர் பயன்படுத் துவார்கள்) ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.


சீயக்காயை நேரடியாக கடைகளில் வாங்கி சரிபாதியாக வெந்தயம் கலந்து செம்பருத்தி பூ செம் பருத்தி இலை, கறிவேப் பிலை, மருதாணி இலை ஆகி யவற்றைக் காய வைத்து சேர்த்து அரைத்து சாதம் வடித்த கஞ்சியில் கரைத்து தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் ஒரே மாதத் தில் இள நரையின் நிறம் மாறத் தொடங்கும்.


 ஃப்ரெஷ்ஷான பீட் ரூட்டை தோல் சீவி மிக்ஸியில் நீர் விடாமல் அரைத்து அதன் சாறை பிழிந்து வைக்கவும். எண்ணெய் படியாத கூந்தலில் அடிப் பகுதியிலிருந்து வேர்ப்பகுதி நுனிப்பகுதிவரை சாறை நன்றாக தடவி அரைமணி நேரம் கழித்து குளிக்கவும்.


வாரம் மூன்று முறை செய்து வந்தால் ஒரே மாதத்தில் இளநரை சிவந்து வருவதை பார்க்கலாம். நாளடைவில் இவை கருமையாக மாறத்தொடங்கும். காலையில் அலுவலகத் துக்கு செல்லும் போது கூட பீட்ரூட் சாறை கூந் தலின் மீது பூசி செல்லலாம். இவைஎனவே பிசுக்கை உண் டாக்காது.


மருதாணி இலை,மஞ்சள் கரிசலாங் கண்ணி தலா ஒரு கைப்பிடி அளவு, பெரிய நெல்லிக்காய் (சிறு துண்டு களாக), கறி வேப்பிலை இரண்டு கைப்பிடி அளவு, செம்பருத்தி பூ 2, செம் பருத்தி இலை 10, பசும்பால்கற்றாழை நுங்கு 1 தேக்கரண்டிஎலுமிச்சைச்சாறு 1 டீஸ்பூன்வெந்தயப்பொடி 1 டீஸ்பூன்சேர்த்து மைய அரைக்கவும்.


அதிகரிக்கும் இளநரையை உடனே போக்க மருதாணி கைகொடுக்கும். ஆனால் மிக மிக பக்குவமாக பயன் படுத்த வேண்டும். இல்லையென்றால் கூந்தலில் சிவப்பு குடி கொள்ளும்.


மருதாணியுடன் கறிவேப்பிலை சம மாக எடுத்து அரைத்து இளநரை உள்ள பகுதிகளில் மட்டும் மிக பொறுமையாக (அடுத்தவரை வைத்து) முடியில் பரப்பி சரியாக பத்து நிமிடத்தில் கூந்தலை அலசி விடுங்கள். தொடர்ந்து இப்படி செய்து வந் தால் நாளடை வில் இளநரையைத் தேடுவீர்கள்.


இவைஎனவே ஆரம்பம் முதலே சரியான சிகிச்சை மேற்கொண்டால் இளநரையைத் தடுத்து விடலாம்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்