சாலை விபத்தில் சிக்கியவருக்கு உதவிய மு.க.ஸ்டாலின்

கொளத்தூர் தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்க சென்று கொண்டிருந்த ஸ்டாலின் சாலையில் விபத்தில் சிக்கியிருந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.


திமுக தலைவர் ஸ்டாலின் தமது கொளத்தூர் தொகுதியில் ஆய்வுப் பணிகளை இன்று மேற்கொண்டார். அயனாவரம் திக்காகுளம் சலவைக் கூடத்தில் ஓய்வெடுக்கும் அறைகளுடன் கூடிய நவீன சலவைக் கூடத்திற்கு அவர் அடிக்கல் நாட்டினார்.


அங்கிருந்து மாதவரம் நெடுஞ்சாலையில் ஸ்டாலின் சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக சென்ற இருசக்கர வாகனம், சாலையில் நடந்து கொண்டிருந்தவர் மீது மோதியது. இந்த விபத்தில் சிக்கிய நபரை மீட்ட திமுக தலைவர் ஸ்டாலின், மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.


பின்னர் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்