பயணச்சீட்டு அச்சுப் பிழையால் தக்கலையா...தக்காளியா.. மக்கள் குழப்பம்..!
வடிவேலு புகைப்படங்களுடன் இந்த பயணச்சீட்டு குறித்து சமூக வலைதளங்களில் மீம் பரவி வருகிறது.
தக்கலையா...தக்காளியா..? பயணச்சீட்டு அச்சுப் பிழையால் மக்கள் குழப்பம்..!
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பேருந்தில் வழங்கப்பட்ட மின்னணு பயணச்சீட்டில் தக்கலை என்பதற்குப் பதிலாக தக்காளி என்று அச்சிடப்பட்டது சமூகவலைதளங்களில் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.
போடியிலிருந்து கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்திற்கு தினமும் காலையில் அரசு பேருந்து இயக்கப்படுகிறது.
இந்தப் பேருந்தில், தக்கலை பகுதியைச் சேர்ந்த மில்டன் என்பவர், மார்த்தாண்டத்திலிருந்து தக்கலைக்கு பயணம் செய்துள்ளார்.
அப்போது, அவருக்கு வழங்கப்பட்ட பயணசீட்டில் தக்கலை என்பதற்குப் பதிலாக தக்காளி என அச்சிடப்பட்டிருந்தது.
இதனை சமூக வலைதளங்களில் மில்டன் பதிவேற்றம் செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து, வடிவேலு புகைப்படங்களுடன் இந்த பயணச்சீட்டு குறித்து சமூக வலைதளங்களில் மீம் பரவி வருகிறது