2018 ஆண்டு நடந்த நீட் தேர்விலும் ஆள்மாறாட்டம் - இந்தி தெரியாத தமிழக மாணவர் இந்தியில் தேர்வெழுதியிருப்பது அம்பலம்..!

2018-ம் ஆண்டு சி.பி.எஸ்.இ நடத்திய நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவர் மற்றும் அவரது தந்தையை கைது செய்துள்ளனர்.


நீட் ஆள்மாறாட்டம் விவகாரம் தொடர்பாக ஏற்கனவே சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து 10-க்கும் மேற்பட்டோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


குறிப்பாக மாணவர்களுக்காக ஆள்மாறாட்டம் செய்தவர்களின் படத்தை வெளியிடும் அவர்களை தேடி வருகின்றனர். இந்நிலையில் தான் கடந்த நவம்பர் மாதம் மருத்துவ கல்வி இயக்குநரகத்துக்கு மர்ம நபர் ஒருவர் இ.மெயில் ஒன்றை அனுப்பியிருந்தார்.


அதில் சென்னை  மருத்துவ கல்லூரியில் படிக்கும் இரண்டாம் ஆண்டு மாணவனுக்கு, இந்தி தெரியாது ஆனால் பீகாரில் இந்தியில் நீட் தேர்வு எழுதி மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.


சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவன் தனுஷ் மீது சந்தேக இருப்பதாக கல்லூரி நிர்வாகம் பூக்கடை போலீசாரிடம் புகார் அளித்தனர்.


 கல்லூரி நிர்வாகத்தின் புகாரை அடுத்து அந்த மாணவன் கல்லூரிக்கு வருவதுமில்லை என்பதும் போலீசாருக்கு தெரியவந்தது. மருத்துவக் கல்லூரி நிரவாகத்தின் புகாரின் அடிப்படையில் பூக்கடை தனிப்படை போலீசார் ஓசூர் சென்றனர்.


ஆனால் மாணவனும், அவரது தந்தையும் கடந்த சில நாட்களாகவே தலைமறைவாகி இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.


நீட் ஆள்மாறாட்டம் குறித்த வழக்குகளை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்தும் வரும் நிலையில், தலைமறைவான சென்னை மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவனுக்கும் நீட் ஆள் மாறாட்ட விவகாரத்தில் தொடர்பு இருக்குமோ  என்ற அடிப்படையில் , சி.பி.சி.ஐ.டி போலிசாருக்கும் தலைமறைவான மாணவனின் தகவல்கள் அனுப்பபட்டுள்ளதாக பூக்கடை போலிசார் தெரிவித்தனர்.


 தற்போது நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் சிபிஎஸ்இ நடத்திய நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்திருப்பது உறுதியானதை அடுத்து புதிய வழக்கு ஒன்றை சிபிசிஐடி போலீசார் பதிவு செய்தனர்.


சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த இரண்டாம் ஆண்டு மாணவன் தனுஷ் மற்றும் அவரது தந்தையை பிடித்து விசாரணை செய்து வந்தனர்.


இந்த நிலையில் சிபிசிஐடி போலீசார் 2018-ம் ஆண்டு நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக ஒசூரை சேர்ந்த தனுஷையும் அவரது தந்தையையும் கைது செய்துள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்