வன்முறையில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம்; வீடு இழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் - அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
டெல்லி கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 10 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்தில் டெல்லி பற்றி எரிந்தது.
பல்வேறு பகுதிகள் வன்முறைக்கு இறையாகின. இந்தச் சம்பவத்தில் ஒரு காவலர் உள்பட இதுவரையில் 35 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே, டெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதியை அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
வீடுகளை இழந்தவர்களுக்கு தலா 5 லட்ச ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
இந்த நிவாரணம் முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என அறிவித்துள்ள அவர், டெல்லியில் 'பெரிஷ்டே' திட்டத்தின் மூலம் படுகாயம் அடைந்தவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.