நல்லாசிரியர் விருதை திருப்பிக் கொடுத்த முன்னாள் தலைமை ஆசிரியர்.

ஐந்து, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவதை தமிழக அரசு கைவிட வலியுறுத்தி, தருமபுரியில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் தனது நல்லாசிரியர் விருதை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தார். தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த சோலியனூர் நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர் அல்லிமுத்து. 2012 - 2013 ஆண்டு தமிழக அரசின் டாக்டர் ராதகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்றவர். இவர், 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வால் மாணவர்களின் மன வளர்ச்சி மற்றும் இடைநிற்றல் அதிகரிக்கும் என கூறி, பொதுத்தேர்வு நடத்தும் திட்டத்தை அரசு கைவிட கோரிக்கை விடுத்துள்ளார். இதற்காக தான் வாங்கிய நல்லாசிரியர் விருதுடன், கோரிக்கை மனு ஒன்றை மாவட்ட ஆட்சியர் மலர்விழியிடம் அளித்தார். நல்லாசிரியர் விருதை வாங்க மறுத்த மாவட்ட ஆட்சியர், ஆசிரியரின் கோரிக்கை மனுவை மட்டும் பெற்றுக்கொண்டு அரசுக்கு அனுப்பி உரிய பதிலை பெற்றுத்தருவதாக கூறினார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்