புத்தாண்டு தினத்தன்று குழந்தை பிறப்பு: இந்தியா முதலிடம்

புத்தாண்டு தினத்தன்று உலகம் முழுவதும் 3 லட்சத்து 92 ஆயிரத்து 78 குழந்தைகள் பிறந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள யுனிசெப் நிறுவனம் உலகிலேயே அதிகபட்சமாக இந்தியாவில்தான் குழந்தைகள் பிறப்பு அதிகம் என்று கூறியுள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், பசிபிக் பெருங்கடலில் இருக்கும் பிஜி தீவில் 2020-ம் ஆண்டின் முதல் குழந்தை பிறந்துள்ளதாகவும், கடைசியாக அமெரிக்காவில் குழந்தை பிறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 3 லட்சத்து 92 ஆயிரம் குழந்தைகள் 8 நாடுகளில் பிறந்துள்ளன என்றும் யுனிசெப் கூறியுள்ளது. இதில் இந்தியாவில் அதிகபட்சமாக 67 ஆயிரத்து 385 குழந்தைகளும், சீனாவில் 46 ஆயிரத்து 299 குழந்தைகளும், நைஜீரியாவில் 26 ஆயிரத்து 39 குழந்தைகளும், பாகிஸ்தானில் 16 ஆயிரத்து 787 குழந்தைகளும் பிறந்துள்ளன என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)