பொது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 31ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெறும் என நாடாளுமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2020 - 2021ம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை பிப்ரவரி 1-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். ஜனவரி 31-ல் தொடங்கும் நாடாளுமன்ற முதற்கட்ட கூட்டத்தொடர் பிப்ரவரி 11-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 31-ல் நடைபெறும் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். இந்த கூட்டத்தொடர் பிப்ரவரி 11-ம் தேதி வரை நடைபெறும் என கூறப்படுகிறது. நிலைக்குழுக்கள், பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் மானியங்களுக்கான கோரிக்கைகளை பரிசீலிக்கவும், அவற்றின் அறிக்கைகளைத் தயாரிக்கவும் உதவும் வகையில், நாடாளுமன்றம் பிப்ரவரி 11 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டு மார்ச் 2 ஆம் தேதி மீண்டும் கூடும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தொடர்ந்து ஏப்ரல் 3-ம் தேதி வரை கூட்டத் தொடர் நடைபெறும் என உத்தேசமாக முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)