அதிவேகமாக இயக்கப்பட்ட இருசக்கர வாகனம் சாலையில் மோதி தீப்பிடித்ததால் பரபரப்பு!

சென்னை பள்ளிக்கரணையில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்து விட்டு குடிபோதையில் அதிவேகமாக இயக்கப்பட்ட இருசக்கர வாகனம் சாலையில் மோதி தீப்பிடித்ததால் பரபரப்பு நிலவியது. சென்னையை அடுத்த நன்மங்கலம் பகுதியைச் சேர்ந்த நவீன் என்பவர் சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் புத்தாண்டு கொண்டாடிவிட்டு குடிபோதையில் அதிவேகமாக தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். பள்ளிக்கரணை - வேளச்சேரி சாலையில் வந்தபோது திடீரென நிலைத்தடுமாறிய வாகனம் சாலையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பெட்ரோல் கசிந்ததால் இருசக்கர வாகனத்தில் மளமளவென தீப்பிடித்தது. இதையடுத்து காயமடைந்த நவீனை அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)