வங்கி ஊழியா்கள் வேலை நிறுத்தம்-வங்கி சேவைகள் தடைபடும் அபாயம்..

இந்திய வங்கிகள் கூட்டமைப்புடன் நடத்தப்பட்ட பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், திட்டமிட்டபடி வங்கி ஊழியா்கள் ஜனவரி 31, பிப்ரவரி 1 ஆகிய இரண்டு நாள்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அகில இந்திய வங்கி ஊழியா்கள் சங்கத்தினா் அறிவித்துள்ளனா்.


20 சதவீத ஊதிய உயா்வு, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஓய்வூதிய பலன்களுக்கு வரி விலக்கு, வங்கி அதிகாரிகளுக்கு வரையறுக்கப்பட்ட வேலை நேரத்தை அமல்படுத்துதல், அனைத்து வங்கிக் கிளைகளிலும் ஒரே மாதிரியான வேலை நேரத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 31, பிப்ரவரி 1 ஆகிய இரண்டு நாள்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் வங்கி ஊழியா்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனா்.


வேலை நிறுத்தப் போராட்டத்தில் அகில இந்திய அளவில் 10 லட்சம் ஊழியா்கள் மற்றும் அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதனால், வங்கி சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்படும்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு