5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு!

டெல்லியில் 5 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவரும் குற்றவாளிகள் என டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. டெல்லி காந்திநகரில் 2013ஆம் ஆண்டு 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் மனோஜ் ஷா, பிரதீப் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். News7 Tamil இந்த வழக்கை விசாரித்த டெல்லி கர்காடூமா மாவட்ட நீதிமன்றம், சிறுமிகளை தேவதைகளாக மதிக்கும் சமூகத்தில், 5 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது, சமூகத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளதாக கவலை தெரிவித்தது. குற்றம்சாட்டப்பட்ட இருவரையும் குற்றவாளிகள் என அறிவித்த நீதிமன்றம், தண்டனை மீதான வாதங்கள் ஜனவரி 30 ஆம் தேதி நடைபெறும் என தெரிவித்தது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)