உள்ளாட்சி பிரதிநிதிகளாக வெற்றி பெற்றவர்கள் பதவியேற்பு:

தமிழகத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் வெற்றிபெற்ற 91 ஆயிரத்து 907 உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவியேற்றனர். தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்கள் தவிர்த்து, 27 மாவட்டங்களில் உள்ள 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. வாக்கு எண்ணிக்கை கடந்த 2 மற்றும் 3ம் தேதிகளில் நடந்தன. இந்நிலையில், வெற்றிபெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவியேற்கும் நிகழ்ச்சி அந்தந்த உள்ளாட்சி அலு வலகங்களில் நேற்று நடைபெற்றது. அதில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், கிராம ஊராட்சித் தலைவர்கள், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 91 ஆயிரத்து 907 பேர் பதவியேற்றுக் கொண்டனர். இதற்கிடையே, இத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் தங்கள் தேர்தல் செலவு கணக்கை 30 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், தேர்தலில் செலவிடப்பட்ட தொகைக்கான கணக்கை முறைப்படி உரிய படிவத்தில் பராமரிக்க வேண்டும் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது . அவ்வாறு பராமரிக்கப்பட்ட கணக்கு நகலை, தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டவர்களும் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்து அதற்கான ஒப்புகைச் சீட்டை, தேர்தல் நடத்தும் அலுவலரிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு , வருங்காலங்களில் உள்ளாட்சி தேர்தல்களில் 3 ஆண்டுகளுக்குத் போட்டியிட தடை விதிக்கப்படும். ஆளுநர் உரையால் நாட்டில் எந்தவித தாக்கமும் ஏற்படப் போவதில்லை என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், "எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியின் இந்த மூன்றாண்டு காலம் தமிழகத்தின் மிக இருண்ட காலம். இந்த ஆட்சியில், முதல்வரே ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கிறார். அவர் மட்டுமல்ல; 'முதல்வர் எவ்வழி எங்களுக்கும் அவ்வழி' என்று, துணை முதல்வர், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், உள்ளாட்சித்துறை அமைச்சர், மின்துறை அமைச்சர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி, தினந்தோறும் ஊழலிலேயே குளித்துத் திளைத்து வருகின்றனர். நுனி முதல் அடிவேர் வரை ஊழல் பாய்ந்தோடுவதால், மாநில நிர்வாகம் எனும் விருட்சம் உளுத்து, வலுவிழந்து, மக்களுக்கு ஒன்றுக்கும் உதவாத ஒதியமரமாகி விட்டது. கோடநாடு முதல் குட்கா வரை, ஈரோடு கரூர் முதல் தலைமைச் செயலகம் வரை, செய்யாதுரை முதல் சேகர் ரெட்டி வரை, எங்கும் ரெய்டுகள், ரெய்டுகள், ரெய்டுகள், கணக்கற்ற ரெய்டுகள். ரெய்டுகள் என்பது நாள்தோறும் நடக்கும் சகஜ நிகழ்வாகி, மாநிலமே அவமானத்தால் கூனிக் குறுகிவிட்டது. 4 லட்சம் கோடி ரூபாய் கடன், 5 லட்சம் குற்றங்கள் என கடன் சுமை எப்போதும் இல்லாதபடி ஏறியும், குற்றங்கள் பெருகியும் கூட, அது குறித்துக் கிஞ்சிற்றும் கலங்காமல்கடுகளவும் கவலைப்படாமல், 'என் கடன் ஊழல் செய்து நாளைக் கழிப்பதே' என்ற பாணியில் பொல்லாத ஆட்சி ஒன்று இங்கே பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறது. நீட் தேர்வில் இரட்டை வேடம்; தொழில் வளர்ச்சி இல்லை; சட்டம் ஒழுங்கு சரியாகப் பேணப்பட வில்லை, வேலையில்லாமல் இருக்கும் 90 லட்சம் இளைஞர்களின் எதிர்காலத்துக்கு உத்தரவாதம் இல்லைஅறிவிப்புகளை முழுமையாக நிறைவேற்றும் அக்கறை இல்லை, விவசாயிகளுக்கும்நெசவாளர்களுக்கும், மீனவர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், இந்த ஆட்சியில் நிறைவோ, நிம்மதியோ இல்லை. மதச்சார்பின்மைக்கு வேட்டு வைத்துநாட்டில் பிளவுண்டாக்கும், மத்திய பாஜக அரசின் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவுக்கு ஓட்டளித்து, அது நிறைவேறக் காரணமாகிசிறுபான்மை முஸ்லிம்களுக்கும், இந்துக்களான ஈழத் தமிழர்களுக்கும் துரோகம் இழைத்துதவறுகளுக்கெல்லாம் உச்சகட்டத் தவறு இழைத்துவிட்டது அதிமுக. நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், மாநிலத் தேர்தல் ஆணையம் காவல்துறை உள்ளிட்ட அரசுத் துறைகள் அதிமுக எனும் முக்கோணக் கூட்டணி அமைத்து; அராஜகம், அதிகார துஷ்பிரயோகம், அனைத்து விதமான தேர்தல் தில்லு முல்லுகளிலும் ஈடுபட்டது இந்த அரசு.நடுநிலையோடு எந்தக் கோணத்தில் பார்த்தாலும், யாருக்கும் பயன்படாத, அதிமுகவினருக்குக்கு மட்டுமே பயன்படுகிற, பொல்லாத ஒருதலை ஆட்சியே இங்கே நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். மக்கள் நலனில் எப்போதும் ஏனோதானோவென நடந்து வரும் இப்படிப் பட்ட எதிர்மறை ஆட்சியில்; "ஊழல் என்பதே நோக்கம், பாஜக அரசின் பாதந் தாங்குவதே பரம சுகம்" என்று நடக்கும் அதிமுக ஆட்சியில்; ஏதோ சடங்குக்காகவும், சம்பிரதாயத்திற்காகவும் நடக்கும் இந்த ஆளுநர் உரையால் நாட்டில் எந்தவிதத் தாக்கமும் எள்ளளவும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. எனவே அந்த உரையைப் புறக்கணித்து பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்திருக்கிறோம்" என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)