உச்ச நீதிமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வழக்கு!

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறும் இஸ்லாமியர்கள் அல்லாத மக்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையிலான குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை பா.ஜ.க அரசு நிறைவேற்றியுள்ளது. இந்த சட்ட மசோதாவுக்கு எதிர்க்கட்சிகளிடையே கடுமையா எதிர்ப்பு எழுந்துள்ளது. மேலும், இந்த மசோதாவால் வடகிழக்கு மாநில மக்கள் வெகுவாக பாதிக்கப்பட நேரிடும் என்பதால் மத்திய அரசின் இந்த சட்டத்திருத்தத்துக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதற்கிடையில், மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களைவையிலும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை பா.ஜ.க நிறைவேற்றியுள்ளது. ஆகையால், மத்திய அரசின் இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடருவது குறித்து எதிர்க்கட்சிகள் ஆலோசனை மேற்கொண்டு வரும் நிலையில், குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி. இதேபோல், காங்கிரஸ் தரப்பில் இருந்தும் இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தை நாட முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு