பெண் சார் ஆட்சியரை கன்னத்தில் அறைந்த இளைஞர் கைது!

சேலம் மாவட்ட பெண் சார் ஆட்சியரை கன்னத்தில் அறைந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் மேச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட கூணான்டியூர் கிராமத்தில், துணை ஆட்சியர் மற்றும் சார் ஆட்சியர் சுசிலாராணி மேற்பார்வையில் டெங்கு விழிப்புணர்வு மற்றும் கள ஆய்வு பணிகள் நடைபெற்றது. குட்டைமேடு என்ற பகுதியில் அவர்கள் பள்ளி மாணவர்களுடன் கள ஆய்வு மேற்கொண்ட போது, இந்த பணியில் மாணவர்களை ஈடுபடுத்த தங்களிடம் உத்தரவு உள்ளதா என்று கேட்டு அந்த பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவர் சுசிலாராணியிடம் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது அவர் சுசிலாராணியை கன்னத்தில் அறைந்துள்ளார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் படி வழக்கு பதிவு செய்த ஓமலூர் போலீசார், பிரபாகரன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து மேட்டுர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டு பின்னர் அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)