கண்டெய்னர் லாரி மீது அரசு பேருந்து மோதி பயங்கர விபத்து!

சென்னை பாடி அருகே கண்டெய்னர் லாரி மீது அரசு பேருந்து மோதிய பயங்கர விபத்தில், நடத்துனர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், ஓட்டுனர் உட்பட 15 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரா நெல்லூரில் இருந்து கோயம்பேடு நோக்கி வந்த அரசு பேருந்து அதிகாலை சுமார் 2.45 மணியளவில் சென்னை பாடி மேம்பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்த, கண்டெய்னர் மீது வேகமாக மோதியது. இதில் பேருந்தில் பயணம் செய்த ஓட்டுனர் நடத்துனர் உட்பட 15 பயணிகள் பலத்த காயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பயணிகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தின் போது பலத்த காயமடைந்த நடத்துனர் வீரமுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். ஓட்டுனர் கோவிந்தசாமி, தூக்க கலக்கத்தில் வாகனத்தை இயக்கியதே விபத்திற்கு காரணம் என தெரிய வந்துள்ளது. மேலும் விபத்திற்க்கு உள்ளான கண்டெய்னர் ஓட்டுனர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார். காயமடைந்த ஓட்டுனர் உட்பட 15 பேருக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகி


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)