அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஷூ வழங்க ஒப்புதல்!

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஷூ வழங்க ஒப்புதல் அளித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும் 2020-21 கல்வியாண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஷூ வழங்க பள்ளிக்கல்வித்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி 28,64,855 மாணவர்களுக்கு ஷூ வழங்க 66. 71 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஷூ வழங்க 12.85 கோடி ரூபாயும், உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு 53.85 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஷூக்களை கொள்முதல் செய்யும்போது உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் அறிவுறுத்தியுள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)