நடிகர் சங்கத்திற்கு சிறப்பு அதிகாரியை நியமித்து தமிழக அரசு உத்தரவு !

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சிறப்பு அதிகாரியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2015-18ம் ஆண்டிற்கான நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் நிறைவடைந்தது. இதையடுத்து நடிகர் சங்கத் தேர்தல் கடந்த ஜூலை 23ம் தேதி நடைபெற்றது. எனினும், நடிகர் சங்கம் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதால், நீதிமன்ற உத்தரவு வரும் வரை நடிகர் சங்கத்தின் வாக்குகளை எண்ணக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இதனால் வாக்குகள் எண்ணப்படாமல் உள்ளன. இதையடுத்து பதிவுத்துறை உதவி ஐஜி கீதாவை தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான சிறப்பு அதிகாரியாக நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)