சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஏ.பி சஹி நியமனம்

சென்னை, உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதியாக நியமிக்கப்பட்டுள்ள ஏ.பி. சஹி-க்கு, வரும் 11-ம் தேதி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்... சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமாணி ராஜினாமா செய்ததை அடுத்து, பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி சஹியை, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து, குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார். அதன்படி, நவம்பர் 11ம் தேதி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில், ஏ.பி சஹிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். இதனைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் அவருக்கு வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது..


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு