கூலிப்படையை ஏவி தாக்குதல் நடத்திய காவலர்!

சேலத்தை அடுத்த மேட்டூரில் வீட்டின் அருகிலுள்ள அரசு இடத்தினை யார் பயன்படுத்துவது என்பதில் ஏற்பட்ட தகராறில் கூலிப்படையை ஏவி காவலர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆயுதப்படை காவலரான ரமேஷிற்கும், அவரது வீட்டின் அருகே வசித்து வந்த, தங்கராஜ், மணிவண்ணன் குடும்பத்திற்கும் இடையே, அரசு இடத்தினை பயன்படுத்துவதில் தகராறு இருந்து வந்துள்ளது. சென்னை கிண்டியில் பணி புரிந்து வந்த ஆயுதப்படை காவலரான ரமேஷ், 15 நாட்கள் விடுப்பு எடுத்து சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது, அரசு நிலத்தில், ரமேஷ் முள் வேலி அமைத்ததாக கூறப்படுகிறது. இதனால், ரமேஷ் - தங்கராஜ் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த காவலர் ரமேஷ் கூலிப்படையை ஏவி தங்கராஜ் மற்றும் மணிவண்ணன் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் சகோதரர்கள் இருவரும் தலையில் காயத்துடன் சேலம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!