அன்று பேனர்: இன்று கொடிக்கம்பம்; இன்னும் எத்தனை பேர்.........

சென்னையில் ஆளுங்கட்சியினர் வைத்த பேனர் தவறி விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் லாரி ஏறி இறந்தார். இதே போல், கோவையிலும் அதிமுக கொடிக்கம்பம் சாய்ந்ததில், ஏற்பட்ட விபத்தில் ராஜேஸ்வரி என்ற பெண்ணுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. கட்சியினர் வைக்கும் பேனர், கொடி கம்பங்கள் காரணமாக இன்னும் எத்தனை பேர் பாதிக்கப்பட போகின்றனரோ என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். சென்னையில் ரோட்டில் வைத்த பிளக்ஸ் பேனர் விழுந்ததில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்தார். இதன்பின், பிளக்ஸ் பேனர்களுக்கு பதிலாக இரும்பு கம்பியால் கட்சி கொடிகளை கட்டி ரோட்டில் கம்பம் வைத்து வருகின்றனர். நேற்று (நவ.,11) மதியம் சென்னையில் இருந்து விமானம் மூலம் முதல்வர் கோவை வந்தார்.கோவையில் இருந்து கார் மூலம் சேலம் சென்றார். முதல்வரை வரவேற்க அ.தி.மு.க., கட்சியினர் சித்ரா பகுதியில் இருந்து இரு புறங்களிலும் ரோட்டின் ஓரத்தில் கட்சிக் கொடிகளை இரும்பு கம்பிகளில் கட்டி நட்டு வைத்திருந்தனர். இந்நிலையில் நேற்று காலை அவிநாசி ரோடு, கோல்டுவின்ஸ் அருகே மொபட்டில் சென்ற ராஜேஸ்வரி, 22 மற்றும் பைக்கில் சென்ற நித்யானந்தம் ஆகியோர் மீது அவ்வழியாக வேகமாக சென்ற லாரி மோதியது. இதில், ராஜேஸ்வரியின் கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. நித்யானந்தமும் காயமடைந்தார். காயமடைந்த பெண் தனியார் மருத்துவமனையிலும், ஆண் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இச்சூழலில் ரோட்டில் வைத்திருந்த கொடி கம்பம் சாய்ந்ததால் விபத்து ஏற்பட்டதாக தகவல் பரவியது. தகவலறிந்து போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு போலீசார் சென்று விசாரித்தனர். லாரி டிரைவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். இத்தகவலால் குறிப்பிட்ட பகுதியில் வைத்திருந்த கொடி கம்பங்களை மட்டும் கட்சியினர் அப்புறப்படுத்தினர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)