முசாபர்நகர்,மசூதிக்கு 900 சதுர அடி நிலத்தை சீக்கியர் ஒருவர் நன்கொடையாக வழங்கி உள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள புர்காசி நகரில் நேற்று முன்தினம் குருநானக் தேவ் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சீக்கிய மதத்தை சேர்ந்த, சமூக ஆர்வலர் சுக்பால்சிங் பெடி (வயது 70) என்பவர் கலந்து கொண்டார். அப்போது அவர் அந்த பகுதியில் உள்ள மசூதிக்கு தனக்கு சொந்தமான 900 சதுர அடி நிலத்தை தானமாக வழங்குவதாக தெரிவித்தார். தொடர்ந்து 900 சதுர அடி நிலத்திற்கான ஆவணங்களை பஞ்சாயத்து தலைவர் ஜாகிர் பரூக்கியிடம் வழங்கினார். அவரது இந்த நடவடிக்கை சகோதரத்துவத்தை வளர்ப்பதற்கான ஒரு முயற்சியாக கருதி இரு சமூகங்களை சேர்ந்தவர்களும் வரவேற்று இருக்கிறார்கள்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)