தமிழகத்தின் 33வது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி!

தமிழகத்தின் 34வது மாவட்டமாக, தென்காசி மாவட்டத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார். திருநெல்வேலி மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை சமீபத்தில் தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் புதிய மாவட்டத்தின் தொடக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தென்காசியில் இன்று நடைபெறுகிறது. விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று புதிய மாவட்டத்தை தொடங்கி வைக்கிறார். மேலும் 5 ஆயிரம் பயனாளிகளுக்கு 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். விழாவில் துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்கின்றனர். இவ்விழாவையொட்டி தென்காசியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)