பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும் சிவசேனா154 எம்எல்ஏ.,க்களின் ஆதரவு

மும்பை : தங்களுக்கு 154 எம்எல்ஏ.,க்களின் ஆதரவு இருப்பதற்கான பிரமாண பத்திரத்தை சுப்ரீம் கோர்ட்டில் இன்று (நவ.,25) தாக்கல் செய்ய சிவசேனா- தேசியவாத காங்-காங்., கட்சிகள் முடிவு செய்துள்ளன. மகாராஷ்டிராவில் பா.ஜ., ஆட்சி அமைத்ததை எதிர்த்து சிவசேனா, தேசியவாத காங்., காங்., கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு பிறப்பிக்க உள்ளது. இந்நிலையில், இன்றைய வழக்கு விசாரணையின் போது, பெரும்பான்மைக்கு தேவையான 145 எம்எல்ஏ.,க்களின் ஆதரவை விட கூடுதலான பலம் தங்களிடம் உள்ளதாகவும், பா.ஜ.,-அஜித் பவார் ஆட்சி அமைக்க உரிமை கோர முடியாது எனவும் வாதிட 3 கட்சிகளும் திட்டமிட்டுள்ளன. அத்துடன் 154 எம்எல்ஏ.,க்களின் ஆதரவு இருப்பதற்கான பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளன. இந்த பிரமாண பத்திரம் தங்கள் தரப்பு வாதத்திற்கு பலம் சேர்க்கும் எனவும், உடனடியாக நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த உத்தர விட வேண்டும் என்ற தங்களின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் ஏற்பதற்கு எளிதாக இருக்கும் எனவும் 3 கட்சிகளும் நம்புகின்றன. ஆனால் தேசியவாத காங்., கட்சியின் எம்எல்ஏ.,க்கள் அனைவரும் தங்களுக்கு ஆதரவாக உள்ளதாக பா.ஜ., வட்டாரங்கள் உறுதியாக தெரிவிக்கின்றன. சரத் பவார் மீது அக்கட்சி எம்எல்ஏ.,க்கள் அதிருப்தியில் இருப்பதே இதற்கு காரணம் எனவும் பா.ஜ., கூறி வருகிறது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)