சென்னை ஐகோர்ட் கேள்வி

சென்னை: ஆழ்துளை கிணறு தொடர்பாக சென்னை ஐகோர்ட் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும் அரசு நடவடிக்கை எடுப்பதற்கு உயிர்ப்பலி கொடுக்க வேண்டுமா என்றும் கண்டித்துள்ளது. மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் உதவியாளர் பொன் ராஜ். இவர் , ஆழ்துளை கிணறு தொடர்பாக சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை இன்று (29 ம்தேதி ) நீதிபதிகள் சத்யநாராயணன், சேஷாயி ஆகியோர் கொண்ட பெஞ்ச் விசாரித்தது. விசாரணையில் நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி அரசிடம் விளக்கம் கேட்டனர். விதிகளை மீறி எத்தனை ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன? இவ்வாறான தவறுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது ? அனுமதி கொடுத்தால் இதன் ஆவணங்கள் பராமரிக்கப்படுகிறதா ? பயன்படுத்தாமல் எத்தனை ஆழ்துளை கிணறுகள் உள்ளது? இதன் நிலை என்ன ? எத்தனை மூடப்பட்டது ? மூடப்படாமல் இருக்கும் ஆழ்துளை கிணறுகள் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது ? அரசு நடவடிக்கை எடுப்பதற்கு, சுஜித்தை போன்று உயிர்ப்பலி கொடுக்க வேண்டுமா ? இவ்வாறு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)