தமிழ் மொழி தெரிந்தவர்களை பணியமர்த்த நடவடிக்கை எடுப்பதாக, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்

தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில், தமிழ் மொழி தெரிந்தவர்களை பணியமர்த்த நடவடிக்கை எடுப்பதாக, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளில், மாநில மொழி பேசுபவர்களை நியமிக்க வேண்டும், என மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு, திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் கடிதம் எழுதினார். தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில், தமிழ் மற்றும் ஆங்கிலம் தெரியாத வாகன ஓட்டிகள், மிகவும் சிரமப்படுவதாக தெரிவித்த அவர், இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார். இந்நிலையில் வில்சனின் கோரிக்கையை பரீசிலிக்க, துறை செயலாளர் மற்றும் இணை செயலாளருக்கு, அவரது கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)