கோவையில் பத்திரிகையாளர்கள் எனக் கூறி சித்த மருத்துவரிடம் பணம் பறிக்க முயன்ற இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டம் மாச்சம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவர், தனியார் மருத்துவமனையில் சித்த மருத்துவராக பணியாற்றி வருகிறார். கடந்த 10ம் தேதி இவரிடம் தொலைபேசியில் பேசிய நபர், தாங்கள் அளித்த மருந்தால் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாகவும், தங்களை நேரில் சந்திக்க வேண்டும் என கூறியுள்ளனர். அதன்படி கண்ணனை நேரில் சந்தித்த இருவர், தாங்கள் பத்திரிகையாளர்கள் எனவும், இதுதொடர்பான செய்தி வெளியிடாமல் இருக்க, தங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும் மிரட்டியுள்ளனர். இதுதொடர்பாக கண்ணன் அளித்த புகாரின் பேரில் இருவரையும் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)