அரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறைகள் தனியாருக்கு பொருந்தாது: சென்னை உயர்நீதிமன்றம்

அரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தினங்கள், தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் மறைவையொட்டி 2015 ஆம் ஆண்டு ஜூலை 30ம் தேதியை தமிழக அரசு விடுமுறை தினமாக அறிவித்தது. இந்நிலையில், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த தனியார் நிறுவனம், ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்காததோடு, பணிக்கு வராத ஊழியர்களுக்கு அன்றைய ஊதியம் தரவில்லை எனத் தெரிகிறது. இதை எதிர்த்து தனியார் ஊழியர் சங்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாற்றுமுறை ஆவணச் சட்டத்தின் கீழ், அரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தினங்கள் தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)