சீன அதிபர் வருகை! சின்னாபின்னமாகும் மாமல்லபுரம் மக்கள்!

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் வருகிற 12,13 ஆகிய தேதிகளில் மாமல்லபுரத்தில் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இந்நிலையில் தலைவர்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று முதல் மாமல்லபுரம் நகரத்திற்குள் 4 சக்கர வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரம் நகரத்திற்குள் இருந்த பேருந்து நிலையம் தற்காலிகமாக மாற்றப்பட்டு கிழக்கு கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து ஒரு வாரகாலமாக மாமல்லபுரம் நகரத்திற்குள் செல்லும் வாகனங்களையும் போலீசார் முழு சோதனைக்கு பின்னரே அனுமதித்தனர். தொடர்ந்து இன்று காலை முதல் வாகனங்கள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் பொதுமக்களும் மாமல்லபுரம் நகரத்திற்கு செல்ல கிழக்கு கடற்கரை சாலை மாமல்லபுரம் நுழைவாயிலிருந்து நடை பயணமாக செல்கின்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்