23 ஆண்டுகளில் நேபாளத்துக்கு வந்த முதல் சீன அதிபர் ஜின்பிங் தான் என்று சுட்டிக்காட்டினார்

பிரதமர் நரேந்திர மோடியுடன் சென்னை மாமல்லபுரத்தில் பேச்சு வார்த்தை நடத்திய சீன அதிபர் ஜின்பிங் அடுத்தக்கட்ட பயணமாக நேபாளம் சென்றுள்ளார். அந்நாட்டு தலைநகர் காட்மாண்டுக்கு விமானம் மூலம் சென்றடைந்த ஜின்பிங்கிற்கு பீரங்கி குண்டுகள் முழங்க, கலைநிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. நேபாள குடியரசுத் தலைவர் பித்யா தேவி பண்டாரி குடியரசுத்துணை தலைவர் நந்தா பகதூர், பிரதமர் கே.பி. சர்மா ஓலி, அமைச்சரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அதன் பின்னர் நடந்த இருதரப்பு பேச்சுவார்த்தையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், நேபாளத்தின் சுதந்திரம், இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்கு சீனா எப்போதும் ஆதரவளிக்கும் என்றார். இருநாடுகளுக்கு இடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். அவரை தொடர்ந்து பேசிய நோபள குடியரசுத் தலைவர் பித்யா தேவி பண்டாரி, கடந்த 23 ஆண்டுகளில் நேபாளத்துக்கு வந்த முதல் சீன அதிபர் ஜின்பிங் தான் என்று சுட்டிக்காட்டினார். இந்த சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், இரு நாடுகளின் பாரம்பரிய நட்பை பலப்படுத்தும் என்றும் அவர் கூறினார். மேலும் இது நேபாள-சீனா உறவுக்கு ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் பித்யா தேவி பண்டாரி தெரிவித்துள்ளார். அதன் பின்னர் இருநாட்டுத்தலைவர்கள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்