விஜய் ரசிகர்கள் நெல்லை காவல்துறையிடம், சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான சிசிடிவி கேமராக்களை வழங்கினர்.

பிகில் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் நெல்லை காவல்துறையிடம், சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான சிசிடிவி கேமராக்களை வழங்கினர். தீபாவளியையொட்டி அட்லீ இயக்கத்தில், விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் அனைத்து ரசிகர்களும் படத்தின் வெளியீட்டை எதிர்நோக்கி உள்ள நிலையில் நெல்லை விஜய் ரசிகர்கள் செய்திருப்பது பொதுமக்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது. அவர்கள் படத்திற்கு கட்அவுட்டுகள் வைத்து கொண்டாடுவதை தவிர்த்து, நெல்லை மீனாட்சிபுரத்தில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி உட்பட, நான்கு இடங்களில் சிசிடிவி அமைக்க, சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான, சிசிடிவி மேகராக்களை காவல்துறையினரிடம் வழங்கினர். வழக்கமாக திரைப்படத்தின் வெளியீட்டன்று சிறப்பாக கொண்டாடி வரும் ரசிகர்கள் காவல் துறையினருக்கு சிசிடிவியை வழங்கியுள்ளது அப்பகுதி மக்களால் பாராட்டப்பட்டு வருகிறது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு

ஸ்ரீ பாலாஜி பவன் ஹோட்டல் ஒன்றில் வாங்கப்பட்ட சைவ உணவில் இறந்த எலியின் தலை அசைவமாக மாறிய அதிர்ச்சி சம்பவம்