லஞ்சத்தில் ஐ.எஸ்.ஐ முத்திரை வாங்கியது அதிமுக அரசு : மு.க.ஸ்டாலின்

லஞ்சத்தில் ஐ.எஸ்.ஐ முத்திரை வாங்கிய அரசு, அதிமுக அரசு என விக்கிரவாண்டி தொகுதி திண்ணைப்பிரச்சாரத்தின் போது திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார். இடைத்தேர்தலுக்காக அரசியல் பிரமுகர்கள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின், விக்கிரவாண்டி தொகுதி, எழும் செம்பொன் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், மக்களின் அடிப்படை பிரச்சனைகளை கூட நிவர்த்தி செய்யாத அரசு தமிழகத்தில் நடைபெறுவதாக விமர்சித்தார். மகளிர் சுயஉதவி குழுக்களை உருவாக்கி பெண்கள் முன்னேற்றத்திற்கு சுழல் நிதி, வங்கி கடன், மானியத்துடன் கூடிய கடன் பல்வேறு நலதிட்டங்களை திமுக அரசு வழங்கியதாக ஸ்டாலின் தெரிவித்தார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கண்டிப்பாக 5 சவரனுக்கு கீழ் உள்ள நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என ஸ்டாலின் உறுதி கூறினார். தமிழகத்தின் சட்டஒழுங்கு பிரச்னைக்கு, பொள்ளாச்சி பாலியல் சம்பவமே எடுத்துகாட்டு என்றும் அவர் சாடினார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)