இருசக்கர வாகனத்தில் தலைகவசம் அணியாமல் வந்தவர்களுக்கு காவல் துறையினர் நூதன தண்டனை விதித்தனர்

தரமபுரியில் இருசக்கர வாகனத்தில் தலைகவசம் அணியாமல் வந்தவர்களுக்கு காவல் துறையினர் நூதன தண்டனை விதித்தனர்.தருமபுரி நகரில் பல்வேறு இடங்களில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தலைகவசம் அணியாமல் உரிய ஆவணங்கள் இன்றி வந்தவர்கள் மீது அபராதம் விதிக்காமல் அவர்களுக்கு நூதன தண்டனை வழங்க காவல்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி, அவர்களை ஊர்வலமாக அழைத்து சென்று போலீசார், தலைகவசம் அணியாமல் சென்று விபத்தில் சிக்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு பழங்கள் மற்றும் ரொட்டிகள் அவர்களது சொந்த செலவில் வழங்கும் வகையில் நடவடிக்கை எடுத்தனர். காவல்துறையினரின் இந்த நடவடிக்கையால் பெரும்பாலான பொதுமக்கள் அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்