விடாமல் பின்தொடர்ந்த ரசிகரை வீட்டிற்குள் அழைத்த நடிகர் ரஜினி!

சென்னை விமான நிலையத்தில் இருந்து நடிகர் ரஜினிகாந்த்தின் வீடு வரை, அவர் சென்ற காரை பின் தொடர்ந்து சென்ற இளைஞரை வீட்டிற்கு அழைத்து, அவருடன் ரஜினி புகைப்படம் எடுத்துக்கொண்டார். தர்பார் திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு, இமயமலை சென்ற ரஜினி, நேற்று சென்னை திரும்பினார். இதனால் அவரை காண ரசிகர்கள் அங்கு திரண்டனர். விமான நிலையத்தில் இருந்து தனது வீட்டிற்கு ரஜினி புறப்பட்டதையடுத்து, அதில் ஒரு ரசிகர் நடிகர் ரஜினியின் காரை, அவரது, வீடு வரை பைக்கில் பின் தொடர்ந்து சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு சென்றதும், தனது வீட்டில் பணியாற்றுபவர்களிடம் கூறி, தனது காரை பின் தொடர்ந்து வந்த இளைஞரை, ரஜினிகாந்த் வீட்டிற்கு அழைத்துள்ளார். அந்த இளைஞரிடம், இவ்வாறு ஆபத்தான முறையில் பைக்கை ஓட்டாதீர்கள், என்று அறிவுரை கூறிய ரஜினி, அவரோடு புகைப்படம் எடுத்துக்கொண்டு அனுப்பி வைத்துள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)