தவறு செய்யும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

தவறு செய்யும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வாட்ஸ் அப் ஆடியோ மூலம் அரசு அதிகாரிகளுக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனால் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில் அதிகாரிகளின் மெத்தன போக்கை கண்டிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, வாட்ஸ் அப் மூலம் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், முறையாக செயல்படாத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு

ஸ்ரீ பாலாஜி பவன் ஹோட்டல் ஒன்றில் வாங்கப்பட்ட சைவ உணவில் இறந்த எலியின் தலை அசைவமாக மாறிய அதிர்ச்சி சம்பவம்