சீன அதிபர் வருகையால் சென்னையில் போக்குவரத்து நெரிசல்...!

கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகை காரணமாக சென்னையில் கிண்டி, சோழிங்கநல்லூரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சீன அதிபரின் வருகையால், சென்னையில், கிண்டி, சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை, ராஜீவ்காந்தி சாலை, கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பெருங்களத்தூரில் இருந்து சென்னை நோக்கி செல்லும் வாகனங்கள் ஜிஎஸ்டி சாலை வழியாக அனுமதிக்கப்படாமல், மதுரவாயல் வழியாக திருப்பிவிடப்பட்டது. இதனால் மதுரவாயல் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கிண்டி வழியாக வாகனங்கள் அனுமதிக்கப்படாத நிலையில், வெளியூர் வாகனங்கள் சென்னைக்குள் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முட்டுக்காடு சாலையில் மொத்தமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்துக்கிடந்தன. வாகன ஓட்டிகள் திக்குமுக்காடி போயினர். பழைய மாமல்லபுரம் சாலையில் செல்லும் வாகனங்கள் சோழிங்கநல்லூரில் இருந்து பெரும்பாக்கம் நோக்கி திருப்பிவிடப்பட்டது. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்