காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் கைது!

இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி தொகுதியில் தங்கியிருந்ததாக கூறி, காங்கிரஸ் எம்.பி வசந்தகுமாரை போலீசார் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் பரப்புரை ஓய்ந்த நிலையில், வெளியூரை சேர்ந்தவர்கள் தொகுதியை விட்டு வெளியேற அறிவுறுத்தப்பட்டனர். இந்நிலையில் நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட கழுங்கடி பகுதியில் காங்கிரஸ் எம்பி வசந்தகுமாரை போலீசார் கைது செய்தனர். வெளிநபரான வசந்தகுமார் நாங்குநேரியில் தங்கியிருந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாளையங்கோட்டையில் இருந்து நாகர்கோவிலுக்கு சென்ற தம்மை, போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்ததாக எம்பி வசந்தகுமார் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆளுங்கட்சிக்கு தோல்வி பயம் ஏற்பட்டு உள்ளதாகவும், தாம் எந்த வாக்குச்சாவடிக்கும் செல்லவில்லை எனவும் கூறினார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)