தீபாவளியை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாற்று வழி

தீபாவளி பண்டிகைக்காக வெளியூர் செல்லும் பயணிகள், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாற்று வழி செய்யப்பட்டுள்ளது. 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து, திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு அல்லது ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு வழியாக சென்றால், போக்குவரத்து நெரிசல் இன்றி பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்ள மற்றும் இயக்கம் பற்றி புகார் தெரிவிக்க 94450- 14450 என்ற செல்பேசி எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. மேலும் கோயம்பேடு பேருந்துநிலையத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)