சென்னையில், பத்திரப் பதிவுத்துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், கட்டுக்கட்டாக கணக்கில் வராத பல லட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது

மயிலாப்பூர், சைதாப்பேட்டை, கொரட்டூர் மற்றும் திருச்சி ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களில் உள்ள பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது, மயிலாப்பூர் அலுவலகத்தில், 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக சார் பதிவாளர் முத்துக்கண்ணன் கைது செய்யப்பட்டார். அவருக்கு இடைத்தரகராக செயல்பட்ட புரபுல்லா சந்திரன் என்பவரும் கைது செய்யப்பட்டார். சைதாப்பேட்டை, கொரட்டூர், மயிலாப்பூர் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில், கணக்கில் வராத லட்சக்கணக்கான ரூபாய் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை கொரட்டூரில் இயங்கி வரும் வில்லிவாக்கம் துணை சார் பதிவாளர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., லாவண்யா தலைமையில், 15 பேர் கொண்ட குழு சோதனை நடத்தியது. அப்போது, கணக்கில் வராத லட்சக்கணக்கான ரூபாய் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில், டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் 4 ஆய்வாளர்கள் உள்பட 10 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தினர். இதில், கணக்கில் வராத லட்சக்கணக்கான ரூபாய் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)